விழாக்காலம், விடுமுறை நாட்கள் என கட்டண கொள்ளையில் கட்டுப்பாடே இல்லாமல் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது என்கிறார்கள பேருந்து பயணிகள்.
கண்காணிப்பிற்கு என்றே தனி டீம் அமைத்தாலும் டீல் பேசியது போல எதுவுமே கண்டுகொள்ளாத அதிகாரிகளின் தயவில்தான் இந்த கட்டண கொள்ளையே நடப்பதாக பகிர் கிளப்புகிறார் பட்டுக்கோட்டை பண்ணையார் ஒருவர் !
கடந்த ஆட்சியிலாவது இது போன்ற கட்டண உயர்வுகள் இல்லை என்றும், அவ்வப்போது தட்டி கேட்கும் அதிகாரிகளால் அடங்கி போனார்கள் என்றே கூறப்படுகிறது….
எது எப்படியோ, அதிராம்பட்டினம் நகரத்திற்கு வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ்களில் தற்போது வெகுவாக பயணிகள் குறைந்தே காணப்படுவதாக ஆம்னி பஸ்களின் முதலாளிகள் கவலை தெரிவிக்கிறார்கள்…
இருப்பினும் கட்டண கொள்ளையடித்த ஆம்னி பஸ் ஆசாமிகள், ஏஜெண்டுகளிடம் வர்ரத வாங்கி போடு என்றளவிற்கு இறங்கி போயுள்ளதாக மன்னடி முகவர் ஒருவர் தெரிவிக்கிறார்.
இந்த நிலைக்கு ஆம்னி பேருந்து முதலாளிகள் தள்ளப்பட்டு இருப்பதற்கு காரணம்,நமது பகுதியில் இருந்து வாரம் நான்குமுறை ரயில் போக்குவரத்து தொடங்கியதே காரணம் எனலாம்,இருப்பினும் அதிக பயணிகளை கொண்ட அதிராம்பட்டினத்தில் இருந்து வாரம் ஒருமுறைதான் சென்று வருகிறதா.
இந்த வாரந்திர ரயிலுக்கு பதிலாக தினசரி இரவு நேர ரயில்.இயக்கினால் ஆம்னி பேருந்துகளின் தேவை இருக்காது என அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் கூறுகின்றனர்.