Friday, May 10, 2024

விமான கட்டண நிர்ணயத்தை மிஞ்சும்  தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளை !

Share post:

Date:

- Advertisement -

விழாக்காலம், விடுமுறை நாட்கள் என கட்டண கொள்ளையில்  கட்டுப்பாடே இல்லாமல் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது என்கிறார்கள பேருந்து பயணிகள்.

கண்காணிப்பிற்கு என்றே தனி டீம் அமைத்தாலும் டீல் பேசியது போல எதுவுமே கண்டுகொள்ளாத அதிகாரிகளின் தயவில்தான் இந்த கட்டண கொள்ளையே நடப்பதாக பகிர் கிளப்புகிறார் பட்டுக்கோட்டை பண்ணையார் ஒருவர் !

கடந்த ஆட்சியிலாவது இது போன்ற கட்டண உயர்வுகள் இல்லை என்றும், அவ்வப்போது தட்டி கேட்கும் அதிகாரிகளால் அடங்கி போனார்கள் என்றே கூறப்படுகிறது….

எது எப்படியோ, அதிராம்பட்டினம் நகரத்திற்கு வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ்களில் தற்போது வெகுவாக பயணிகள் குறைந்தே காணப்படுவதாக ஆம்னி பஸ்களின் முதலாளிகள் கவலை தெரிவிக்கிறார்கள்…

இருப்பினும் கட்டண கொள்ளையடித்த ஆம்னி பஸ் ஆசாமிகள், ஏஜெண்டுகளிடம் வர்ரத வாங்கி போடு என்றளவிற்கு இறங்கி போயுள்ளதாக மன்னடி முகவர் ஒருவர் தெரிவிக்கிறார்.

இந்த நிலைக்கு ஆம்னி பேருந்து முதலாளிகள் தள்ளப்பட்டு இருப்பதற்கு காரணம்,நமது பகுதியில் இருந்து வாரம் நான்குமுறை ரயில் போக்குவரத்து தொடங்கியதே காரணம் எனலாம்,இருப்பினும் அதிக பயணிகளை கொண்ட அதிராம்பட்டினத்தில் இருந்து வாரம் ஒருமுறைதான் சென்று வருகிறதா.

இந்த வாரந்திர ரயிலுக்கு பதிலாக தினசரி இரவு நேர ரயில்.இயக்கினால் ஆம்னி பேருந்துகளின் தேவை இருக்காது என அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் கூறுகின்றனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...