இன்றைய உலகில் உடற்பயிற்சி இன்மையால் பலர் பலவிதமான உடல் ஆரோக்கியத்தை இழந்து வருகின்றனர்.
கட்டுப்பாடற்ற உடல் தேகம்தான் இன்று பல நோய்களுக்கும் வித்தாக அமைகிறது.
அத்தகைய கொடிய நோய்களில் இருந்து நமமை நாமே பாதுகாக்க உடற்பயிற்சி மிக அவசியமாகிறது. அதன்படி அமீரக்கதில் இருந்து வந்த மச்சான்ஸ் வாட்ஸ்ஆப் குழுமத்தினர் நடைப் பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இன்று அதிராம்பட்டினம் முதல் பட்டுக்கோட்டை வரையிலான நடைப்பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் மச்சான்ஸ் குழும நண்பர்களான மொய்னுதீன், இப்ராஹிம்,சலீம், அனஸ் மரைக்கான் என்கிற ஹசன் சிகாபுதீன் ஆகியோர் கலந்து கொண்டு இவ் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.