அதிரை ஷிஃபா மருத்துவமனை மற்றும் கண் சிகிச்சையில் 40 வருடங்களாக முன்னோடியாக விளங்கும் திருச்சி தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம் கடந்த 12.09.2023 அன்று A.L. மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பார்வை குறைபாடு கண்டறியப்பட்டு தகுந்த மேற்சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும் Cell Phone பயன்படுத்தும் கால அளவை குறைத்துக் கொள்ளும் படியும், சத்தான உணவு பொருட்களை உட்கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டது.