அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்த்து பெற்றதிலிருந்து நகர மேம்பாட்டில் அதிரை நகராட்சி அக்கரை செலுத்தி வருகிறது !
அதற்க்காக கடந்த இர்ண்டாண்டிற்கு முன்பு போடப்பட்ட சாலைகளை மேம்பாடு என்ற அடிப்படையில் பேப்பர் ரோஸ்ட் சாலைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி 13வது வார்டுக்கு உட்பட்ட ஆஸ்பத்திரி ரோடு சாலை கடந்த இரண்டாண்டுக்கு முன்னர் போடப்பட்ட தார் சாலையில் எந்த வித பழுதும் ஏற்படவில்லை, இருப்பினும் இச்சாலையை மேம்பாடு செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டதாக தெரிகிறது அதனையடுத்து இதனை நகராட்சி நிர்வாகம் வேறு வழியின்றி அப்பணியை மேற்கொள்ள வேண்டியதாயிற்று என ஆணையர் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து இப்பகுதி மக்களின் கருத்தாக கூறப்படுவதாவது, நகரின் பல பகுதிகளில் சாலையே இல்லாமல் உள்ளது என்றும் அதனை புதுப்பிக்க வேண்டியதை விடுத்து நல்ல சாலைகளை செப்பனிடுவதாக கூறி சல்லடை சாலைகளை அமைத்து செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர், மேலும் மில்லிங் செய்யப்படாமல் போடப்படும் சாலைகளின் லட்சனத்தை அறிய ஒரே ஒரு மழை போதும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்
கள ஆய்வில் அவ்வாறாகவே காண கிடைக்கிறது ஆக மொத்தத்தில் பேப்பர் ரோஸ்ட் சாலை டோட்டல் வேஸ்ட்… மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் வீணடிக்கப்படுகிறது என்பதை நினைத்தால் வேதனைத்தான் மிஞ்சும் !