Saturday, May 11, 2024

அதிரையில் 3வயது சிறுவனை கடித்த வெறிநாய் கூட்டம்.., மெத்தன போக்கில் அதிரை நகராட்சி…?

Share post:

Date:

- Advertisement -

.தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் வெறி நாய்கள் அதிகம் உலா வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக பல்வேறு கட்ட கோரிக்கைகளை முன்வைததும் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், இன்றைய தினம் அதிரை ஷிஃபா மருத்துவமனை அருகாமையில் சதாம் நகர் பகுதியில் ஆதில் என்ற மூன்றரை வயது பச்சிளம் சிறுவனை வெறி நாய்கள் சூழ்ந்து கடித்துள்ளது.

சிறுவனின் அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த சிறுவனின் பெற்றோர் அந்த வெறிநாய் கூட்டத்திடமிருந்து குழந்தையை மீட்டு அதிரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இந்நிலையில் அதிரை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சதாம் நகர்(மழவேனிற்காடு ஊராட்சி) அருகே உள்ள அதிரை பகுதி பொதுமக்கள் சிலர் கூறுகையில், அதிராம்பட்டினத்திலும் இதேபோன்று சம்பவங்கள் நடைபெறுவதாகவும், பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாமல் பல்வேறு விஷயங்களில் மெத்தனபோக்கில் அதிரை நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். இன்னிலையில் சதாம் நகர் போன்ற சில பகுதிகளை அதிரை நகராட்சியுடன் இணைக்க முயற்சித்து வருகிறது குறிப்பிடுகின்றனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...