தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் சமீபகாலமாக சிறுபான்மை விரோத போக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அதன் ஒருபகுதியாக பெண்கள் மதரஸா நடைபெற்று வர கூடிய பழைய இமாம் ஷாஃபி பள்ளி இடத்தை எந்தவித நோட்டீசும் அளிக்காமல் அவசர அவசரமாக சனிக்கிழமை அன்று நகராட்சி நிர்வாகம் கையகப்படுத்த முயற்சி செய்வது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் அவசர கதியில் நகராட்சி நிர்வாகம் செயல்படுவதாக சட்டவல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் இஸ்லாமிய மத குருமார்களான ஆலிம்களிடம் பெண்கள் மதரஸாவுக்கு விடுமுறை அளிக்குமாறு நகராட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலத்தில் நடப்பது போல் தற்போது அதிரையில் சிறுபான்மை மக்களின் கல்வி நிலையங்களை சட்டவிரோதமாக நகராட்சி நிர்வாகம் துவம்ஷம் செய்ய நினைப்பது சிறுபான்மை மக்களிடையே பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தை உருவாகியுள்ளது.