தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பட்டுக்கோட்டை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :
வரும் 03/02/2024 சனிக்கிழமை (நாளை) அன்று பட்டுக்கோட்டை 110/ 33-11 கேவி நகரியம் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கேவி பெரியதெரு, 11 கேவி VOC நகர், 11 கேவி RV நகர், 11 கேவி வளவன்புரம்(வளவன்புரம், கண்டியன் தெரு, மன்னை நகர், தாலுகா ஆபிஸ், வீட்டு வசதி வாரியம், மயில்பாலையம், தங்கவேல் நகர், பெரிய கடைத்தெரு, தேரடி தெரு, பாக்கியம் நகர், அறந்தாங்கி ரோடு, பண்ணவயல் ரோடு, மாதா கோவில் தெரு, சிவக்கொல்லை, செட்டித்தெரு, ஆஸ்பத்திரி ரோடு, R.V. நகர், தலையாரி தெரு), 11 கேவி பள்ளிக்கொண்டான்(அணைக்காடு, பொன்னவராயன்கோட்டை, முதல்சேரி, சேண்டாக்கோட்டை, மாளியக்காடு பள்ளிக்கொண்டான்) மற்றும் 33/11 கேவி துவரங்குறிச்சி துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கேவி பழஞ்சூர், 11 கேவி காசாங்காடு, 11 கேவி கள்ளிக்காடு, 11 கேவி ராசியங்காடு( துவரங்குறிச்சி, மண்ணங்காடு, மழவேனிற்காடு வெண்டாக்கோட்டை) மின் பாதைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மேற்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.