தஞ்சை நாடாளுமன்ற தொகுதியை முஸ்லீம் லீக்கிற்கு ஒதுக்க வேண்டும்.
திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமை 2 சீட்டுக்கள் ஒதுக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
கடந்தமுறை இராமநாதபுரம் சிட்டிங் எம் பி நவாஸ் கனிக்கு மீண்டும் ஒதுக்க வேண்டும் என முஸ்லீம் லீக்கர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதவிர இராமநாதபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட உள்ளதாகவும் செய்திகள் வெளிவரத்த தொடங்கியுள்ளது.
அரசியல் காய் நகர்வுகளை பொறுத்து கடைசி நேர காட்சிகள் மாற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், தஞ்சை நாடாளுமன்ற தொகுதியை கூடுதலாக பெற முஸ்லீம் லீக் வியூகம் வகுத்தள்ளதாக தெரிகிறது.
அதிமுக கூட்டணியில் இருக்கும் தாமாகவுக்கு தஞ்சை நாடாளுமன்ற தொகுதி கிடைக்க உள்ள நிலையில், உள்ளூரில் பல்வேறு காரணங்களால் திமுகமீது கொண்ட வெறுப்பை வாக்காக மாற்ற திமுக தலைமை முடிவெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியை தீர்மானிக்கும் சக்தியாக இஸ்லாமிய வாக்கு வங்கிகள் உள்ளதால் முஸ்லீம் லீக்கிற்கே திமுக பச்சைக் கொடி காட்டும் என கூறப்படுகிறது.