அதிராம்பட்டினம் பகுதிகளில் பேரூராட்சியின் சார்பில் ஊரின் முக்கிய பகுதிகளில் சாலை அமைக்கும் பணி மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்தது, இதில் ஒரு பகுதியாக சி எம் பி லைன் – நடுத்தெரு பகுதிகளில் அமைக்கப்பட்ட சாலைகள் அமைத்த ஒரு சில வாரங்களிலேயே உடைந்து வர துவங்கி உள்ளது. இது குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் அஹமது அஷ்ரஃப் பேரூராட்சி அலுவலகத்தை அணுகிய போது முறையான பதில் அளிக்கப்படவில்லை. இது குறித்து ஆய்வில் ஈடுபட்ட அஹமது அஸ்ரப் சாலை மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணியில் ஊழல் நடந்ததை கண்டுபிடித்தார், இந்த செயலை செய்தது தற்போதைய திமுகவின் கவுன்சிலர் ராஜா என தெரிய வந்தது. இது குறித்து கவுன்சிலர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அதிராம்பட்டினம் ECR சாலை ஸ்தம்பித்தது.