Monday, June 23, 2025

போக்குவரத்து தொழிலாளர் வேளை நிருத்தம் எதிரொலி ! கூடுதல் ரயில் இயக்க முடிவு !!

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னையில் கூடுதலாக 30 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் – தெற்கு ரயில்வே,

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அடுத்து சென்னையில் கூடுதலாக 30 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆம் தேதி சீசன் டிக்கெட் உள்ளவர்கள் தவிர்த்து, புறநகர் ரயில்களில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பயணிகள் சென்றதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது. 6 ஆம் தேதி 2 லட்சத்து இரண்டாயிரம் பேரும், 7 ஆம் தேதி ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேரும் பயணித்துள்ளனர்.

கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, சென்னை கடற்கரை வேளச்சேரி இரு மார்க்கத்தில் 8 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கடற்கரை  அரக்கோணம், கடற்கரை ஆவடி வழித்தடங்களில் தலா 2 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடங்களில் 9 ரயில்கள் சிறப்பு ரயில்கள் செல்ல உள்ளன. இதேபோல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களுக்கு கூடுதலாக 9 ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...

நெருங்கும் ரமலான் – பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை!

ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்கிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு...

மக்களே உஷார் தமிழகத்தில் வேகமாக  பரவி வரும் ‘ஸ்கிரப் டைஃபஸ்’ பாக்டீரியா..!

தமிழகத்தில் 'ஸ்கிரப் டைஃபஸ்' எனப்படும் பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள்,...
spot_imgspot_imgspot_imgspot_img