Wednesday, February 19, 2025

போக்குவரத்து தொழிலாளர் வேளை நிருத்தம் எதிரொலி ! கூடுதல் ரயில் இயக்க முடிவு !!

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னையில் கூடுதலாக 30 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் – தெற்கு ரயில்வே,

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை அடுத்து சென்னையில் கூடுதலாக 30 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆம் தேதி சீசன் டிக்கெட் உள்ளவர்கள் தவிர்த்து, புறநகர் ரயில்களில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பயணிகள் சென்றதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது. 6 ஆம் தேதி 2 லட்சத்து இரண்டாயிரம் பேரும், 7 ஆம் தேதி ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேரும் பயணித்துள்ளனர்.

கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, சென்னை கடற்கரை வேளச்சேரி இரு மார்க்கத்தில் 8 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கடற்கரை  அரக்கோணம், கடற்கரை ஆவடி வழித்தடங்களில் தலா 2 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடங்களில் 9 ரயில்கள் சிறப்பு ரயில்கள் செல்ல உள்ளன. இதேபோல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களுக்கு கூடுதலாக 9 ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மக்களே உஷார் தமிழகத்தில் வேகமாக  பரவி வரும் ‘ஸ்கிரப் டைஃபஸ்’ பாக்டீரியா..!

தமிழகத்தில் 'ஸ்கிரப் டைஃபஸ்' எனப்படும் பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள்,...

மிரட்டும் கனமழை : 9 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளையும்...

⭕⭕ BIG BREAKING: அதிரை கடற்கரையில் ரூ.2கோடி மதிப்பிலான போதை பொருள்...

அதிராம்பட்டினம் அடுத்த கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கிடப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, பட்டுக்கோட்டை கடற்கரை காவல் படையின்...
spot_imgspot_imgspot_imgspot_img