Sunday, February 1, 2026

பட்டுக்கோட்டை மின்வாரிய கழகத்தில் SDPI கட்சியினர் மனு அளித்தனர்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி,நாடியம் மின்வாரியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக தொடர்ந்து வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படுத்துகின்றனர்.

மல்லிப்பட்டினம்,புதுப்பட்டிணம்,செந்தலை,மரக்காலசை போன்ற பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வசிப்பதால் வெள்ளிக்கிழமை மின்தடையால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆகவே இந்த மின்தடையை மாதத்தின் வேறொரு கிழமைகளில் மாற்றக்கோரி செந்தலை,மல்லிப்பட்டினம், மரக்காலசை,புதுப்பட்டிணம் ஆகிய ஊர்களின் ஜமாஅத் நிர்வாகத்தின் கடிதத்துடன் SDPI கட்சியின் நிர்வாகிகள் இன்று (13.7.2018) பொறியாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

SDPI கட்சியின் தஞ்சை மாவட்ட பொதுச்செயலாளர் மதுக்கூர் ரஹீஸ்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஔரங்கசீப், மல்லிப்பட்டினம் SDPI கட்சி நகரத்தலைவர் பஹத் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் சந்தித்து மனு கொடுத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img