தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து இன்று (25.8.2018) சனிக்கிழமை அதிரை நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமை அதிரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் திரு.டாக்டர்.
ஏ.அன்பழகன் தொடங்கி வைத்தார்.அதிரை ரோட்டரி சங்க தலைவர் Rtn.முகமது சம்சுதீன்,செயளாலர். Rtn.அகமது மன்சூர், பொருளார்.Rtn.சாகுல் ஹமீது முன்னிலை வகித்தனர்.
முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு இ.சி.ஜி,இரத்த அழுத்தம்,உடல் எடை,இரத்தத்தில் சர்க்கரை அளவு இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டு சிறப்பு மருத்துவ நிபுணர்களால் உரிய ஆலோசனை வழங்கப்பட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.இம்முகாமில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.