அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் மேடு பள்ளம் விபத்து ஏற்பட வாய்ப்பு.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ~ பட்டுக்கோட்டைக்கு செல்லும் சாலையில் மேடு பள்ளம் ஏற்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அதிரை ~ பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை எதிரில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் மேற்பகுதியில் சரியாக தார் சாலை போடப்படவில்லை. அவ்வழியாக பேருந்துகள், இருசக்கர வாகனங்கள், பள்ளி பேருந்துகள் பொதுமக்கள் பயணம் செய்கின்றனர்.
இதனால் சாலையில் உள்ள பள்ளத்தினால் விபத்துகள் ஏற்படும் ஆபயம் உள்ளது.மேலும் இதற்கு அப்பகுதியில் சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளது என குறிப்பிடத்தக்கது.
இதனை நெடுஞ்சாலை துறையினர் பள்ளத்தை சரிசெய்து விபத்துக்களை தவிர்க்க சாலையை அமைத்துதருமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.