அதிராம்பட்டினம் MMS கரீம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக பொருப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில் தமாக பாஜகவுடன் கூட்டனி அமைத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது.
சிறுபான்மையினர் பெருவாரியாக வாழும் அதிராம்பட்டினத்தில் அவர் சார்ந்த கட்சிக்கு வாக்கு கேட்க இயலாத சூழலாலும், மத்தியில் மதசார்பற்ற அரசு அமையவேண்டும் என்ற நோக்கோடு தஞ்சை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் SS பழனிமாணிக்கத்துக்கு ஆதரவு என பகிரங்கமாக அறிவிப்பு செய்தார்.
இதனை அடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் NR ரங்கராஜன் அதிரை பேரூர் நகர தலைவரை நீக்கியுள்ளாதாக உறுதிசெய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை அடுத்து பாரம்பரியமிக்க மமீசெ வகையராக்கள் ராகுலின் தலைமையிலான காங்கிரஸ்கட்சிக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகமுள்ளன என்கின்றனர் அதிரை அரசியல் நோக்கர்கள்.