Thursday, March 19, 2026

அதிரை காவல் நிலையம் சார்பாக பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையம் சார்பாக பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

★பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியூர் செல்லும்பொழுது அது குறித்த விபரத்தை காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தினால் உங்கள் வீடு உள்ள பகுதி கண்காணிக்கப்படும்.

★விலை உயர்ந்த பொருட்கள், தங்க நகைகளை வீட்டில் வைப்பதை விட வங்கி லாக்கரில் வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

★இரவு நேரத்தில் வீட்டிற்கு முன்புறம் முகப்பு விளக்கை எரியவிட்டு உறங்கினால் அந்த பகுதியில் ஆள் நடமாட்டங்கள் இருப்பதை அறிய எளிதாக இருக்கும்.

★பகல் நேரங்களில் விற்பனையாளர்கள் போல், குறிப்பாக அயல் மாநிலத்தவர்கள் போன்ற நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம். அப்படி யாரேனும் சந்தேகப்படும்படி இருப்பின் உடனடியாக காவல் துறையினருக்கு தெரிவிக்கவும்.

★வேலை காரர்கள் மற்றும் இதர நபர்களிடம் பண விபரம், வெளியூர் செல்லும் விபரம் பற்றி பேச வேண்டாம்.

★பீரோவ், வீட்டை பூட்டிவிட்டு சாவியை அருகில் வைக்க வேண்டாம்.

★முன் பின் தெரியாத நபர்கள் உங்களிடம் உதவி நாடி வந்தால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

★இரவில் உறங்கும்பொழுது காற்றோட்ட வசதிக்காக வெளிகதவையோ, ஜன்னல் காதவையோ திறந்து வைக்கக்கூடாது.

★இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை பாதுகாப்பு இல்லாத இடத்தில் நிறுத்த வேண்டாம்.

காவல் ஆய்வாளர், அதிராம்பட்டினம்.

தொடர்புக்கு: 9498159678,
04373 – 242450.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 21/05/2025...
spot_imgspot_imgspot_imgspot_img