Saturday, March 21, 2026

மல்லிப்பட்டிணத்தின் குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தின் பல பகுதிகளில் மழைநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி.

கடந்த மூன்று நாட்களாக விடாமல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஊரின் பல பகுதிகளில் மழைநீர் வெளியேறாமல் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.பார்வையிட கூட அரசு அதிகாரிகள் இதுவரை யாருமே வரவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து திமுக உறுப்பினர் நூருல் அமீன் நம்மிடம் கூறுகையில் மழைநீர் எளிதில் செல்ல எந்தவித வடிகாலும் இல்லாத காரணத்தாலும்,கடந்தகாலங்களில் எவ்வளவு கனமழை பெய்திட்டாலும் மழைநீர் கடலில் கலப்பதற்கு ஏற்றவகையில் இருந்தது, ஆனால் துறைமுகம் கட்டிய பிறகு மழைநீர் கடலில் கலப்பது தடுக்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் நீர்த்தேங்கி காணப்படுகிறது.முறையான வடிகால் இன்றி இருப்பதே குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததற்கான காரணமாகும்.இதனை உடனடியாக மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு போர்கால அடிப்படையில் குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீரை மோட்டார் உதவிகொண்டு வெளியேற்றிட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img