Tuesday, March 17, 2026

நான் ஜெயலலிதாவின் மகள்’-பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு

spot_imgspot_imgspot_imgspot_img

 

ஜெயலலிதா மகள் என தன்னை அறிவிக்க கோரி பெங்களூரு பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதி ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரவுள்ள நிலையில், பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா தன்னை ஜெயலலிதாவின் மகள் என்ற அறிவிக்குமாறும், டி.என்.ஏ பரிசோதனைக்காக மறைந்த ஜெயலலிதாவின் உடலை மெரினாவில் இருந்து தோண்டி எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் பெயரினை களங்கப்படுத்த கூடாது என்பதால் இது வரை அமைதி காத்ததாகவும், தற்போது அவரது வளர்ப்பு தந்தை இறந்து விட்டதால் இது குறித்து அவர் கூறுவதாகவும் அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
மேலும் ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கை வைஷ்ணவ பிராமிண முறைப்படி செய்ய வேண்டும் என்று அம்ருதா கேட்டுக்கொண்டுள்ளார். அம்ருதாவின் கோரிக்கை மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img