Sunday, February 1, 2026

அதிரை பைத்துல்மாலின் முக்கிய வேண்டுகோள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் கடந்த 30 ஆண்டுகளாக வசதியற்ற மக்களுக்கு பல்வேறு உதவிகளை அதிரை பைத்துல்மால் தொடர்ந்து செய்து வருகிறது. இச்சேவையில் முதன்மையாக இருப்பது வட்டியில்லா நகைக் கடன். இந்த வட்டியில்லா நகைக் கடனை அதிரையர்கள் பெரும்பாலானோர் உபயோகித்து வந்த நிலையில், A.ஹாஜா சரீப் என்கிற நபர் தனியார் நிதி நிறுவனங்களிடம் கந்து வட்டிக்கு கொடுத்து ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்புடைய நகை மற்றும் பண மோசடியை செய்துள்ளதாக தெரியவந்தது.

இதனையடுத்து அதிரை பைத்துல்மால், மூத்த குற்றவியல் வழக்கறிஞர் உதவியுடன் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் 16.08.2022 அன்று புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிரை பைத்துல்மால் பற்றியும் இந்த மோசடியை பற்றியும் தவறான தகவல்களை, அவதூறுகளை பொதுமக்கள் பரப்ப வேண்டாம் எனவும், இது குறித்த சந்தேகங்கள், கேள்விகளுக்கு அதிரை பைத்துல்மால் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விளக்கத்தை கேட்டுப் பெறலாம் என ABM கூறியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img