அதிரையில் NTF – தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு சார்பாக நாளை 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பேரூந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த பொதுக்கூட்டதிற்கு அதிரை நகர தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர் S.அப்துல் வஹாப் தலைமையில், தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் P.ஜைனுல் ஆபிதீன், தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் மாநில பேச்சாளர் S.A.இம்ரான் கான் ஆகியோர் மாமனிதர் நபிகள் நாயகம் எனும் தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளனர். மேலும், இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள பெண்களுக்கு தனி இட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.