பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தினந்தோறும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக மகப்பேறு தொடர்பான சிகிச்சைகளுக்காக ஏராளமானோர் வருகைபுரிகின்றனர். சராசரியாக ஒருநாளைக்கு 3 முதல் 10 குழந்தைகள் இந்த மருத்துவமனையில் பிறக்கின்றன. இந்நிலையில், மக்களின் தேவையை கருத்தில் கொண்டு பட்டுக்கோட்டையில் மகப்பேறு பிரிவுக்கென ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடத்தினை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கா.அண்ணாதுரை பார்வையிட்டு திட்டத்திற்கான ஏற்பாட்டு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளரும் அதிரை முன்னாள் சேர்மனுமான எஸ்.எச்.அஸ்லம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...





