Sunday, May 19, 2024

பதற்றத்தில் கேரளா மாநிலம்!!பட்டப்பகலில் 6 வயது குழந்தையை கடத்திய மர்ம கும்பல்!!

Share post:

Date:

- Advertisement -

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் நேற்று(27/11/2023) மாலை 6:30மணியளவில் தனது சகோதரனுடன் டியூஷன் சென்று வீடு திரும்பிய அபிஜெல் சாரா என்ற 6 வயது குழந்தையை பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் ஹோண்டா அமெஸ் காரில் மர்ம கும்பல் ஒன்று கடத்திசென்றுள்ளது.

இந்நிலையில் அந்த மர்ம கும்பலை சேர்ந்த ஒரு பெண் குழந்தையின் குடும்பத்தாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 10லட்சம் ரூபாய் நாளை(28/11/2023) காலை 10மணிக்குள் வேண்டும் என்றும் அப்படி பணத்தை கொடுத்தால் குழந்தையை தங்களின் வீட்டிலேயே வந்து விட்டுவிடுவதாக பேசியுள்ளார். பணம் உடனடியாக கொடுக்க ஒப்புக்கொண்ட பிறகும் அந்த கும்பல் வேறு எந்த தகவலும் கூறலாம் தொலைபேசியை துண்டித்துள்ளது.

தற்பொழுது வரை அந்த மர்ம கும்பல் யாரென்று தெரியாததாலும் குழந்தையை மீட்கும் முயற்சியிலும் கேரளா மாநிலம் முழுவதும் அவசர நடவடிக்கையாக காவல்துறை அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுபோன்ற கடத்தல் சம்பவம் கேரளா கொல்லம் பகுதியில் அரங்கேறியது இதுவே முதல்முறையாக உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பதற்றமும், பரபரப்பும் நிலவுகிறது.

மேலும் குழந்தை குறித்து தகவல் அறிந்தால் உடனடியாக தகவல் அளிக்கும்படி கேரளா மாநில காவல்துறை சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....