Monday, May 20, 2024

தஞ்சையில் CBD மற்றும் SNM அமைப்புகள் நடத்திய குருதிக் கொடையாளர்கள் சேர்க்கை முகாம்!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

தமிழகம் எங்கும் பல்வேறு பகுதிகளில் அவசரமாக வரக்கூடிய பல்வேறு இரத்த தேவைகள் தொடர்ச்சியாக பூர்த்திசெய்வதில் தன்னார்வல தொண்டு அமைப்புகளின் பங்கு அளப்பறியதே.

அதே போல் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து வரக்கூடிய அவசர இரத்த தேவைகளை பூர்த்தி செய்வதில்  கிரசண்ட் பிளட் டோனர்ஸ்(CBD) மற்றும் சமூக நீதி நற்பணி மன்றம்(SNM) அமைப்புகள் தொடர்ந்து சிறந்த முறையில் சேவையாற்றி வருவது பொதுமக்கள் அறிந்த ஒன்றே.

தற்போதைய சூழ்நிலையில் தஞ்சாவூர் பகுதியில் அதிக அளவில் இரத்த தேவைகள் வந்தவண்ணம் இருப்பதை கருத்தில்கொண்டு CBD அமைப்பு தொடர் விழிப்புணர்வு மற்றும் இரத்த கொடையாளர் சேர்க்கை முகாம் நடத்த முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் முதற்கட்டமாக தஞ்சாவூர் ஆற்றங்கரை பள்ளிவாசல் வளாகத்தில் இன்று(09/02/2024) காலை 11 மணி முதல் CBD மற்றும் SNM அமைப்புகள் இணைந்து இரத்த கொடையாளர் சேர்க்கை முகாமை நடத்தினர்.

இம்முகாமில் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு சுமார் 160க்கும் மேற்பட்ட இரத்த கொடையாளர்களின் விபரங்கள் அவர்களின் முழு விருப்பத்துடன் பெறப்பட்டது.

இந்த முகாமிற்கு CBD அமைப்பின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகோ.Ln.அமல் ஸ்டாலின் பீட்டர் பாபு தலைமை தாங்கி துவக்கிவைத்தார்.

இம்முகாமில் CBD அமைப்பின் நிர்வாகிகள் பாய்ஸ் அகமது, ஜெய் சூர்யா, சலாஹுத்தீன், லெனின் மனோஜ் மற்றும் SNM அமைப்பிலிருந்து இஸ்மாயில், ஸுஹைல், ராசித், ஈலால் ஆகியோர் கலந்துகொண்டு களப்பணியாற்றினர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : அஹமது சல்மான் அவர்கள்..!!

புதுமனைத் தெருவை சேர்ந்த (சித்தீக் பள்ளி எதிர்) மர்ஹும் செ.மு.முஹம்மது இக்பால்...

அடுத்து என்ன படிக்கலாம்? மாணவ/மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி – கீழத்தெரு நூருல் முகம்மதியா சங்கத்தினர் அசத்தல்.

2024-25ஆம் கல்வியாண்டிற்கான முன்னேற்பாடுகளை கல்வி நிலையங்கள் எடுத்து வருகிறது. சமீபத்தில் +2, SSLCக்காண...

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...