Wednesday, May 15, 2024

தேர்தல் களம் 24 : சுயேட்சையாக களமிறங்குகிறார் தடா ரஹீம் ? – பரபர அரசியலில் ராமநாதபுரம் !

Share post:

Date:

- Advertisement -

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், இந்திய தேசிய லீக் கட்சியின் நிறுவன தலைவர் தடா ஜெ அப்துல் ரஹீம் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில், போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அதிரை எக்ஸ்பிரஸ் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட எங்களுக்கு பல்வேறு கட்சிகளில் இருந்தும், அழைப்புகள் வந்த வன்னம் உள்ளது என்றும், இக்கால கட்டத்தில் யாரையும் நம்பாமல் சுயமாக களமிறங்க திட்டமிட்டு உள்ளதாக கூறுகிறார்.

மேலும்,சில இஸ்லாமிய அரசியல் கட்சிகள் சமுதாய மக்களை அடகுவைத்து ஒன்றிரண்டு சீட்டுக்களை பெற்று தங்களை வளப்படுத்தி கொள்கிறார்கள் என்றும், அவ்வாறான செயலை இந்திய தேசிய லீக் கட்சி ஒரு போதும் செய்யாது என தடா ரஹீம் தெரிவித்தார்.

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு இந்திய தேசிய லீக்கின் பங்கு எவ்வாறு இருந்துள்ளது என அதிகாரிகளுக்கும் தமிழக அரசிற்கும் நன்றாக தெரியும் எனவும், அவர்களின் விடுதலையில் சில இஸ்லாமிய அமைப்புகள் தங்களின் லேபில்களை ஒட்டி கொள்கிறார்கள் என்றார்.

ராமநாதபுரத்தில் குறிப்பாக போட்டியிட முனைவது ஏன் என்ற கேள்விக்கு அதற்கான காரணங்களை கண்டிப்பாக ஊடகங்களில் வெளிப்படுத்துவோம் என்றும் அப்போது நமது வெற்றியும் உறுதிபடுத்தப்படும் என்றார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...