நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இறுதி செய்யப்படாத நிலையில், அதிமுக கூட்டணிக்கு ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஏற்கனவே தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு மஜக ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற மஜக தலைமை நிர்வாகக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த மஜக பொதுச் செயலாளர் ஹாரூன் ரஷீத், அதிமுக கூட்டணிக்கு மஜகவின் ஆதரவை தெரிவித்தார்.
அப்போது தலைவர் பஷீர் அஹமது, அவைத்தலைவர் சம்சுதீன் நாஸர் உமரி, துணைச் செயலாளர்கள் சைஃபுல்லாஹ், காயல் சாகுல் ஹமீது, அப்சர் சையது, தாரிக் முகமது உள்ளிட்ட தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.