அதிரையில் கடந்த சில மாதங்களாக ஆய்வு செய்கிறோம், கணக்கு எடுக்கிறோம் என்று சிலர் வீடு வீடாக சென்று வீடுகளில் உள்ள பெண்களிடம் விபரம் வாங்கி செல்கின்றனர்.
ஆனால் அவர்கள் உண்மையில் அரசு துறை சார்ந்தவர்கள் தானா அல்லது வேறு ஏதேனும் சமூக அமைப்பினரா என ஆய்வு செய்வது எல்லாம் கிடையாது.
ஆனால் இது போன்ற தகவல்கல் தவறான முறையிலே உபயோகிக்கும் சந்தர்ப்பம் உள்ளன.
இதனிடையே சமீப காலமாக டெங்கு சோதனை என்று ஒரு கும்பல் வீடு வீடாக சென்று இரத்த மாதிரிகளை எடுத்து வந்துள்ளனர்.
அவர்களை மடக்கிய இளைஞர்கள் உரிய ஆவணத்தை கொண்டு வந்தால் மட்டுமே உங்களை அனுமதிக்க முடியும் என்றும், அடுத்து நீங்கள் வரும் பட்சத்தில் அதிரை அரசு மருத்துவமனையில் ஒப்புதல் பெற்றோ, அல்லது காவல் நிலைய அங்கீகாரம் பெற்றோதான் உள்ளே வர வேண்டும் என எச்சரிக்கை செய்து அனுப்பியுள்ளனர்.
ஆகவே அங்கீகாரமற்ற நபர்கள் சோதனை என்ற பெயரில் ஆட்கொல்லி நோய்களை உடலுக்குள் பரவச்செய்யும் அபாயமும் உள்ளது.
எனவே இது போன்ற அங்கீகாரம் அற்ற நபர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம் என பொதுமக்கள் எச்சரிக்கபடுகிறார்கள்.