அதிரையில் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அதிரை SSMG அணியினரும் ஒரத்தநாடு அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய அதிரை SSMG அணியினர் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். அதிரை SSMG அணியின் சார்பில் சைஃபுதீன் 2 கோல்கலும் , ஹக்கீம் மற்றும் நசீம் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். இறுதியில் அதிரை SSMG அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
முன்னதாக மாலை 5 மணியளவில் நடைபெற்ற முதல் போட்டியில் காரைக்குடி – அத்திக்கரை அணிகள் மோதின. இதில் காரைக்குடி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.
நாளைய தினம் விடையாட இருக்கின்ற அணிகள் :
புதுக்கோட்டை ~ காரைக்குடி