அன்மைக்காலமாக தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும் அவ்வப்போது மழை பெய்து வந்தது.
தேனி, கம்பம், கோயம்புத்தூர் போன்ற ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் காலை வரை பெரும்பாலான இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.
இதனையடுத்து தமிழகத்தில் வரும் 7 ம் தேதி மிகக் கனமழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
அக்டோபர் 7 ம் தேதியன்று 25 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கையினால் தமிழகத்தில் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் அபாயகரமான இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின்படி ‘ரெட் அலர்ட்’ என்பது எதை குறிக்கும்?
- ‘ரெட் அலர்ட்’ என்பது குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்யும். வானிலை மிகவும் மோசமாக இருக்கும். மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு சாலை வசதிகள் துண்டிக்கப்படும்.. உள்ளுர் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி அபாயகரமான பகுதிகளுக்கு செல்ல கூடாது என்பதாகும்.