தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கடந்த மாதம் 15ஆம் தேதி கஜா புயல் தாக்கியது. இதனால் டெல்டா மாவட்டங்கள் உருக்குலைந்து போனது. மக்கள் தங்கள் வாழ்வதாரத்தையே இழந்து கடுமையான துயரத்திற்கு ஆளாகினர். புயலால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்கள் படிப்படியாக தங்கள் இயல்பு வாழ் க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் கஜா புயலால் பாதித்த பகுதிகளை தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் அண்ணாதுரை இன்று ஆய்வு செய்தார். தஞ்சை மாவட்டம் மதுக்கூர் வட்டத்தில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களை இன்று நேரில் ஆய்வு செய்தார் ஆட்சியர் அண்ணாதுரை. மேலும் புயலால் சேதமடைந்த தென்னந்தோப்புகளிலும் நேரில் சென்று கள ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட வேளாண் துணை இயக்குனரும் நேரில் ஆய்வு செய்தார்.