Home » ஜி.ஹெச். வெண்டிலேட்டரை திருடிய கவர்னரின் செயலாளர்!

ஜி.ஹெச். வெண்டிலேட்டரை திருடிய கவர்னரின் செயலாளர்!

by
4 comments

 

ஒருநோயாளிக்கு சாதாரண தனியார் மருத்துவமனையில் ஒருநாளைக்கு வெண்டிலேட்டர் பொறுத்தினால் 25,000 ரூபாயிலிருந்து 35,000 ரூபாய்க்குமேல் செலவாகும்.

பெரிய மருத்துவமனைகளில் 40,000  ரூபாயிலிருந்து 50,000 ரூபாய்க்குமேல்கூட பில் போடுவார்கள்.

அதனால்தான், ஏழை எளிய நோயாளிகள் அரசு மருத்துவமனையை நோக்கி வருகிறார்கள்.

உயிருக்குப்போராடும் நோயாளிக்குத்தான் வெண்டிலேட்டர் தேவைப்படும்.  கவர்னரின் கூடுதல் செயலாளர் ராஜகோபாலின் அம்மா இப்போது உயிருக்குப்போராடும் சூழலில் இல்லை.

அப்படியிருக்க, அரசு மருத்துவமனையில் ஏழை நோயாளிகளின் உயிரைக்காப்பாற்ற பயன்படுத்தப்படும்  வெண்டிலேட்டரை சட்டத்துக்குப்புறம்பாக வீட்டுக்கு எடுத்துச்சென்றதோடு  வெண்டிலேட்டருக்கு செல்லும் காப்பர் பைப் லைனையே உருவாக்கியிருக்கிறார் ராஜகோபால்.

அதாவது, அரசாங்கத்தின் செலவில் ஆளுநர் மாளிகையில் ஒரு ஐ.சி.யூ. வார்டையே உருவாக்கியுள்ளார்.

இப்படி, எந்த எல்லைக்கும் செல்லும் கவர்னர் மாளிகையை கேள்விகேட்டால் பணியில் குறுக்கிட்டோம் என்று பொய்வழக்கு போடுவார்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter