Home » மனிதநேய மக்கள் கட்சிக்கு ராஜ்யசபா எம்பி??

மனிதநேய மக்கள் கட்சிக்கு ராஜ்யசபா எம்பி??

by admin
0 comment

2019 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் மாதம் 18 ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்த மனித நேய மக்கள் கட்சிக்கு சில காரணங்களால் சீட் ஒதுக்கப்படவில்லை.

இருப்பினும், மமக தலைவர் ஜவாஹிருல்லாஹ் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து 39+1 தொகுதிகளிலும் திமுகவின் கூட்டனி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

தொண்டர்களின் மனோநிலையை கருத்தில் கொண்டு திமுக மனித நேய மக்கள் கட்சிக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கிட வேண்டும் என பாசிச எதிர்ப்பு கொள்கை உடையவர்களின் ஒட்டு மொத்த கருத்தாக உள்ளன.

களத்தில் மமகவினர் பம்பரமாய் சுழன்று திமுக கூட்டணியின் வெற்றிக்கனியை பறித்திடவும் பாசிஷமில்லா தமிழகத்தை முக.ஸ்டாலின் கையில் ஒப்படைக்கும் சக்தியாக இஸ்லாமியர்கள் உள்ளனர்.

ஆக அவர்களின் வாக்குகளை வென்றேடுக்க தேர்தலுக்கு முன்னர் மமகவிற்கு ராஜ்யசபா எம்பி பதவி என திமுகவின் தலைவர் முக.ஸ்டாலின் அறிவிப்பு செய்திட வேண்டும் என கடைக்கோடி மமகவின் தொண்டர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter