அதிரையில் காலை 7 மணி முதலே நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
பகல் 1 மணிக்கு மேல் வாக்குப்பதிவு திடீரென மந்தமானது. கோடை வெயில் கொழுத்தியதால், வாக்காளர்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
இந்நிலையில் வெயில் சற்று குறைந்துள்ளதாலும், வாக்குப்பதிவு நேரம் முடிவடைய உள்ளதாலும், தற்போது வாக்குச்சாவடிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. வாக்காளர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.