தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கரூரில் உள்ள குறிஞ்சி ஹோட்டலில் சாப்பிட சென்றுள்ளார்.
அங்கு சமையல் செய்யும் இடம், சாப்பிட பயன்படும் பொருட்கள், உணவுகளும் மிகவும் சுத்தமின்றி அசுத்தமாக இருந்துள்ளது. மேலும் உணவு சமைப்பவர் கைகள் கூட மிகவும் அசுத்தமாக இருந்துள்ளது. இதனால் அவருக்கு சாப்பிடும் மனமே போய்விட்டது.
உடனே அவர் தனது நண்பரான அதிரையை சேர்ந்த ஷாதலி என்பவருக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
பிறகு ஷாதலி என்பவர் முதலமைச்சர் தனி பிரிவிற்கு மெயில் மூலம் இந்த செய்தியை தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த அறிவிப்பை பெற்றுக்கொண்ட பின் அந்த ஹோட்டலை அரசு அதிகாரிகள் பரிசோதனை செய்து எச்சரித்துள்ளனர்.
எனவே பொதுமக்கள் வெளியில் ஹோட்டல்களில் சாப்பிடும்பொழுது கவணமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.