Home » ராகுல் காந்தியை தரக்குறைவாக விமர்சித்த பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி !

ராகுல் காந்தியை தரக்குறைவாக விமர்சித்த பாஜக எம்பி சுப்பிரமணிய சுவாமி !

0 comment

பாஜக வின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி யுமான சுப்ரமணிய சுவாமி மீது சத்தீஸ்கர், தெலுங்கானா போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போதைப்பொருள் எடுத்துக்கொள்வார் என சுப்பிரமணிய சுவாமி தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதனை எதிர்த்து சத்தீஸ்கர் மாநிலம் ஜஷ்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பவன் அகர்வால் கொடுத்த புகாரின் பேரில் பத்தல்கோன் காவல்நிலையத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள பவன் அகர்வால், “சுப்பிரமணிய சுவாமி வேண்டுமென்றே ராகுல் காந்தியை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். இது ஒரு மோசமான, பொறுத்துக்கொள்ளமுடியாத கருத்து” என கூறியுள்ளார். சுப்பிரமணிய சுவாமி மீது 504, 505(2), 511 ஆகிய பிரிவுகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே விவகாரம் தொடர்பாக தெலுங்கானாவிலும் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter