தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரழப்பு மற்றொருவர் படுகாயம்.
ராஜீவ்காந்தி(வயது 30) தம்பிக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது வள்ளிக்கொல்லைக்காடு அருகே ஜானகி(வயது 64) என்பவர் சாலையை கடக்கும் போது அவர் மீது மோதி நிலை தடுமாறி விழுந்து படுகாயமடைந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராஜீவ்காந்தி உயிரழந்தார். பிரேத பரிசோதனைக்காக அதிராம்பட்டினம் அரசு மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளது.
படுகாயம் அடைந்த ஜானகியை 108 ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து அதிரை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.