Friday, May 3, 2024

அதிரையில் மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்… பேரூராட்சியில் ஜமாத்தார்கள் மனு !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நகரில் கட்டுக்கடங்காத வகையில் நாய்கள் உலாவி வருகின்றன. இந்த நாய்கள் சிறுவர்கள் முதற்கொண்டு அனைவரையும் பதம் பார்க்க துணிந்து விட்டன.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேலத்தெருவை சேர்ந்த முதியவர் ஒருவரை கடித்து குதரியது.

இதனை அடுத்து விழிப்படைந்த ஜமாத்தார்கள் அரசியல் கட்சியினர் பேரூராட்சி நிர்வாகத்தின் பார்வைக்கு மனு அளித்தனர் அந்த மனு மீதான நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ளாமல் அலட்சியம் செய்ததாக தெரிகிறது.

இந்நிலையில், ஷம்சுல் இஸ்லாம் சங்கம்,மேலத்தெரு ஜமாத்தார்கள்,கீழத்தெரு ஜமாத்தார்கள், கடற்கரை தெரு ஜமாத்தார்கள் என இன்று பேரூராட்சி அலுவலகம் சென்று செயல் அலுவலர் ரமேஷ் இடம் மனு அளித்தனர்.

அதில் அதிரை நகரில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து வெளியேற்றுமாறு குறிப்பிட்டு உள்ளது.

முன்னதாக திமுக நகர செயலாளர் இராம குணசேகரன் தலைமையில் ஏராளமான திமுகவினர் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.

இந்தியன் ரெட்கிராஸ் சார்பாக இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.

ஒரே கோரிக்கையை முன்வைத்து தனித்தனியே மூன்ரு மனுக்கள் அளித்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...