5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் நன்றாக தேர்வுக்கு தயாராக வேண்டும் என்ற நோக்கில் முன்னதாகவே தேர்வு அட்டவணை பட்டியல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேர்வுகள் குறித்து பெற்றோர்கள் பயப்பட வேண்டாம் என கல்வித்துறை கூறியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு இந்த தேர்வுகள் எழுதினால் மட்டும்போதும். தற்போது நடைமுறையில் உள்ளதுபோல் மாணவர்கள் கட்டாய தேர்ச்சிபெறுவார்கள். மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் கடுமையான பொதுத்தேர்வு முறைகள் கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதற்கு கல்வியாளர்களும், பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.