Saturday, April 27, 2024

ப்ரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்ட அதே பகுதியில், எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த மற்றொரு பெண் சடலம் !

Share post:

Date:

- Advertisement -

மருத்துவர் ப்ரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்ட அதே பகுதியில் மற்றொரு பெண்ணின் சடலமும் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத்தில் ப்ரியங்கா ரெட்டி என்ற கால்நடை மறுத்துவர் இரு தினங்களுக்கு முன்பு லாரி ஓட்டுநர்கள் மற்றும் க்ளீனர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், குற்றவாளிகள் 4 பேரை தெலங்கானா காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

ப்ரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியே அடங்காத நிலையில், அதே பகுதியில் மற்றொரு பெண்ணின் எரிக்கப்பட்ட உடல் கைப்பற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ப்ரியங்கா கொலை செய்யப்பட்ட ஷம்ஷாபாத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர், பாதி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றியுள்ளனர்.

அந்த பெண், ப்ரியங்காவை போலவே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அந்த பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணங்களா? பெண்ணின் உடல் எரிக்கப்பட்டிருப்பதால், ப்ரியங்காவை கொன்றவர்களே இந்த பெண்ணையும் கொன்றிருக்கலாமா? என்ற சந்தேகங்களின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

ப்ரியங்கா ரெட்டி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள்ளாகவே மற்றொரு பெண்ணின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் அதே பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....