Monday, April 29, 2024

காங்கிரஸ், கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் கவலையில்லை ~ துரைமுருகன்…!

Share post:

Date:

- Advertisement -

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் ஆண்டுதோறும் நடைபெறும் தொகுதி மக்கள் சந்திப்பு மற்றும் தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை. எங்களுக்கு என்ன நஷ்டம்? காங்கிரஸ் விலகினாலும் அது வாக்கு வங்கியை பாதிக்காது. அவர்களுக்கு ஓட்டே இல்லை. அவர்கள் கூட்டணியை விட்டு போனால் போகட்டும். காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் என டிஆர் பாலு கூறினார். நான் பதிலே சொல்லிவிட்டேன்” எனத் தெரிவித்தார்.

இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எனது கருத்தால் திமுக உடனான கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கட்சியின் கீழ்மட்டத்தில் உள்ளவர்களின் கருத்தையே எனது அறிக்கையில் வெளிப்படுத்தினேன். எனது அறிக்கைக்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தற்போது கூட ஸ்டாலினுக்கு பொங்கல் வாழ்த்து கூறினேன். திமுக தலைமை அறிவுறுத்தியும் உள்ளாட்சி தேர்தலில் சில இடங்கள் ஒதுக்கப்படவில்லை. காலம் எப்போதும் நல்ல பதிலைத்தான் சொல்லும்” எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...