Wednesday, May 1, 2024

திருப்பூரில் கலவரத்தை ஏற்படுத்த தன்னை தானே கத்தியால் குத்திய இந்து மக்கள் கட்சி நிர்வாகி…!

Share post:

Date:

- Advertisement -

திருப்பூரில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி தன்னை மர்ம நபர்கள் தாக்கியதாக அளித்த புகார் பொய் என்பது தெரியவந்துள்ளது.
திருப்பூர் வடக்கு மாவட்ட இந்து மக்கள் கட்சியின் துணைச் செயலாளராக இருப்பவர் பகவான் நந்து.

இவரை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டி விட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், பகவான் நந்து தனது ஓட்டுநர் உதவியோடு அரசியல் ஆதாயத்திற்காக தன்னை தானே வெட்டிக்கொண்டதை கண்டுபிடித்தனர்.

கட்சியில் பொறுப்பை பெறுவதற்காக அவர் இப்படி தன்னைத் தானே தாக்கிக்கொண்டார் என்பது விசாரணையில் தெரியவந்து. இதையடுத்து பொய் வழக்கு கொடுத்த பகாவன் நந்து மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக, பகவான் நந்து காவல்துறையிடம் அளித்திருந்த புகாரில் தான் செல்போன் கடை வைத்துள்ளதாகவும், இரவு வீட்டிற்கு போகும்போது தன்னை மர்ம கும்பல் வழிமறித்து வெட்டியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். காயமடைந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...