Friday, May 3, 2024

அதிரையில் சாலை விபத்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி !

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

திருவாரூரை சேர்ந்த கரு குடும்பத்தினர், திண்டுக்கல்லில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திருவாரூர் திரும்பியுள்ளனர்.

இன்று இரவு 9.30 மணியளவில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே வேன் வந்துகொண்டிருந்த நிலையில், எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த அதிராம்பட்டினம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த முத்து என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த 10 பேர் தமுமுக மற்றும் TNTJ ஆம்புலன்ஸ்கள் மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மிகவும் மோசமான நிலையில் இருந்த சண்முக சுந்தரம் என்பவர், மேல்சிகிச்சைக்காக தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த கோர விபத்தினால், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்றுமுன் 11 மணியளவில் கிடைத்த தகவலின்படி, பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.


பலியான இருவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...