தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு யாரும் செல்லவில்லை.
கொரோனா ஊரடங்கு மற்றும் மீன்பிடி தடை காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று(ஜூன் 1) முதல் விசைப்படகுகள் மூலம் கடலில் மீன்பிடிக்க அரசு உத்தரவிட்டது .இந்நிலையில் தஞ்சை மாவட்ட மீனவ கிராமங்களான மல்லிப்பட்டிணம், கள்ளிவயல் தோட்டம்,சேதுபவாசத்திரம் ஆகிய பகுதிகளை சார்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.இறால் மொத்த வியாபாரிகள் ஜூன் 15க்கு பிறகே வியாபாரத்தை தொடங்குவதாக விசைப்படகு மீனவர்களுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
அதனை கருத்தில் கொண்டு ஏற்றுமதியாளர்கள் உடன் கலந்தாலோசனை செய்த பிறகு விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்வார்கள் என்று தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுச்செயலாளர் AK.தாஜூதின் தெரிவித்தார்.