அதிராம்பட்டிணத்தில் ரமலான் காலங்களில் இரவு வணக்க வழிபாடுகள் கொரோனாவுக்கு முன்பு இருந்து வந்தன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசின் விதிமுறைக்கு உட்பட்டு இரவு வழிப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இதனால் இஸ்லாமியர்களின் பெரும்பாலனவர்கள் இரவில் அவரவர் இல்லங்களிலேயே வழிப்பட்டு வருகிறார்கள்.
ஆனால் சில இளைஞர்கள் தமது இருசக்கர வாகனங்களில் ஊர் சுற்றும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து காவல்த்துறைக்கும் வாய்மொழி புகார்கள் வந்த வன்னம் உள்ளதாக தெரிகிறது.
இதனை ஜமாத்தார்கள் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் இதனால் சட்டஒழுங்கு பிரச்சனை எழும் பட்சத்தில் காவல்த்துறை தன் கடமையை செய்ய தயங்காது என காவல் துறை தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
எனவே ஜமாத்தார்களும் பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துகொள்ள வேண்டும் என்றும். தேவைய்ற்ற ஊர் சுற்றலுக்கு அனுமதிக்காதீர்கள் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கைகள்.பாயும் எனவும், யாருடைய சிபாரிசும் இவ்விவகாரத்தில் ஏற்றுகொள்ள மாட்டாது என திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர் காவல் துறையினர்.