அதிராம்பட்டினம் துணைமின் நிலையத்தில் இருந்து அதிரை நகருக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்போது அதிக மின் அழுத்தத்தால் பழுதாகும் இத்துணை மின் நிலையத்தை 110கிலோ வாட் கொண்ட மின் நிலையமாக மாற்ற மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மாதத்தின் கடைசியில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். முன்னதாகவே அறிவிப்பு வெளியிட்டு இத்தடையை ஏற்படுத்துவதால் பொதுமக்கள் இடையூறு இன்றி பணிகளை முன்கூட்டியே செய்து கொள்கின்றனர்.
ஆனால் திடீரென இன்று காலை 11 மணியளவில் இருந்து 3:30 மணிவரை மின் விநியோகம் இல்லாததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். அறிவிக்கப்படாத மின் வெட்டிற்காண காரணத்தை அறிய மின்வாரிய தொலைபேசி எண்ணான 04363242444 என்ற எண்னை தொடர்பு கொண்டால் பதில் இல்லை என புலம்பி தள்ளுகிறார்கள் நுகர்வோர்கள்.