Saturday, April 27, 2024

எப்போ சார் நோம்பு முடியும்? இளைஞர்களின் அட்டூழியம் தாங்க முடியல – ஆதங்கப்படும் அதிரை காவல் துறை –

Share post:

Date:

- Advertisement -

ரமலான் மாதம் தொடங்கி இன்றுடன் 14நோன்புகள் கடந்து விட்டது.

ரமலான் காலங்களில் இரவு வணக்க வழிபாடுகளில் இஸ்லாமியர்கள் அதிகளவில் ஈடுபடுவது வழக்கம்.

இதன் காரணமாக வணக்கஸ்தர்களின் தேவைக்காக அங்காங்கே இரவு நேர கடைகள் செயல்படுகிறது.

பெரியவர்கள்,பெண்கள் என அனைவரும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவர்.

இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சில இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து ஊர் சுற்றுவது வாடிக்கையாக உள்ளது.

அதன்படி இன்று நள்ளிரவு ஊர் சுற்றிய சில இளைஞர்கள் சேது சாலையில் சென்ற சரக்கு வாகனத்தை வழிமறித்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவ்வழியாக சென்ற ஒருவர் அந்த இளைஞர்களை அப்புறப்படுத்தி வாகனம் செல்ல வழிவகை செய்துள்ளார்.

இதனிடையே அவ்வழியே வந்த நெடுஞ்சாலை காவல் துறையினர் அந்த இளைஞர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

சம்பவத்தை கேள்வியுற்ற அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் சம்பவ இடத்திற்கு வரைந்துள்ளார் அப்போது அங்கு நின்றிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் எப்ப சார் நோம்பு முடியும் என எரிச்சலோடு கேட்டுவிட்டு கடந்தார்.

அன்பான் அதிரை உறவுகளே… ரமலான் காலங்களில் நல் அமல்களில் ஈடுபடும் நாம் நமது பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள் எதற்கு செல்கிறார்கள்,யாருடன் செல்கிறார்கள் எங்கெல்லாம் செல்கிறார்கள் என கன்கானிப்பது அவசியமாகிறது.

அப்படி அடங்காத பிள்ளைகளை, தேவையில்லா நேரங்களில் வெளியிடம் சுற்றவிடாமல் வீட்டிலேயே பாதுக்காப்பது அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...