Wednesday, March 18, 2026

திருச்சியில் வகுப்புவாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாநாடு – எழுச்சியுரையாற்றிய தலைவர்கள்!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை அவதூறு செய்து, மதப்பகைமை வளர்த்து அரசியல் ஆதாயம் அடைய துடிக்கும் வகுப்பு வாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு மாநாடு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா முகைதீன் பாகவி தலைமையில் திருச்சி புத்தூர் நால்ரோட்டில் நேற்று(25/06/22) நடைபெற்றது.

இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா MLA, திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல்சமது MLA, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் MP, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் MP, தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில் IAS, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர், சிவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள், அருட்தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,
இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர்கள் & சமுதாய தலைவர்கள் ஆகியோர் ஆகியோர் எழுச்சி உரையாற்றினார்கள்.

மாநாட்டில் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவதூறாக பேசிய பாஜகவை சேர்ந்த நுபுல் சர்மா, நவீன் ஜிண்டாலை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், தமிழக அரசு மதக்கலவர தடுப்புச்சட்டத்தை இயற்ற வேண்டும், நாட்டில் நிலவும் வெறுப்பு அரசியலை தடுத்து நிறுத்த உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கோடிக்கணக்கான மக்களிடம் கையெழுத்து பெற்று அனுப்பி வைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img