அதிரை மேலத்தெரு அண்ணாவியார் குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் S.M. அப்துல் மஜீது என்கின்ற செய்யது முகம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் S.E. முகம்மது காசிம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் S.M. ஹாஜா அலாவுதீன், S.M. அப்துல் காரர், S.M. அலி அக்பர், S.M. ஜாகிர் உசேன், S.M. சேக் தாவூது ஆகியோரின் சகோதரரும், S. முகம்மது இக்பால் அவர்களின் மைத்துனரும், தாஜுதீன், இமாமுதீன் என்கின்ற ராஜா முகம்மது இவர்களின் தாய் மாமாவும், S.M.A. முகம்மது வாசிம் கான் அவர்களின் தகப்பனாருமாகிய S.M. அப்துல் முனாஃப் அவர்கள் இன்று 11/04/2023 செவ்வாய் கிழமை மாலை 4:00 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 11/04/2023 செவ்வாய் கிழமை இரவு 11:00 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.
இறைவா! (இந்த சகோதரரை) மன்னிப்பாயாக! நல்வழி பெற்றவர்களிடையே அவரது தகுதியை உயர்த்துவாயாக! அவருக்குப் பிறகு எஞ்சியிருப்போருக்கு அவரைவிடச் சிறந்த துணையை வழங்குவாயாக! அகிலத்தின் அதிபதியே! எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு அருள்வாயாக! அவரது மண்ணறையை (கப்ரை) விசாலமாக்குவாயாக! அதில் அவருக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவாயாக!
தகவல் :- ASWA