Friday, May 17, 2024

உட்கட்சி  பூசலால் தனித்து விடப்பட்ட அதிரை அம்பேத்கர் நகர் ! – 2வது வார்டு திமுக துணை செயலாளர் பகிரங்க  குற்றச்சாட்டு !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் : வரி கட்டியும் வடிகால் வசதி செய்து தர மறுக்கும் நகராட்சி – உட்கட்சி பூசலால் தமக்கு  ஆண்டு ஒன்றுக்கு  6 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் கடந்த 8 ஆண்டுகளாக இந்த இழப்பு ஏற்பட்டு வருவதாக திமுகவின் முன்னோடி ஒருவர்  கூறுகிறார்.

அதிராம்பட்டினம் நகராட்சி வார்டு எண் 2க்கு உட்பட்ட அம்பேத்கர் நகரை சார்ந்த அப்துல் ஜப்பார் திமுகவின் தீவிர பற்றாளரான இவர் 2வது வார்டில் துணை செயலாளராகவும் உள்ளார்

இவர் சார்ந்துள்ள பகுதியில் சாலை,வடிகால் வசதிகள் எதுவும் இல்லை என்றும் தாம் வசிக்கும் பகுதிக்கு வடிகால் சாலை வசதி கேட்டு பலமுறை புகார் அளித்தும் பலனில்லை என்கிறார்.

மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்தும் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும், கட்சிக்குள் இருக்கும் கோஷ்டி பூசலால் எங்கள் பகுதியை தொடர் புறக்கணிப்பு செய்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கிறார்.

நிலுவை இன்றி வரிகட்டும் எங்களை மாற்றாந்தாய் பிள்ளையாக நகராட்சி அதிகாரிகள் பார்க்கிறார்கள் என்றும், இந்நிலை தொடர்ந்தால்  எங்கள் பகுதிமக்களை ஒன்று திரட்டி ஜனநாயக வழியில் தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம் என கூறுகிறார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...