அதிரை 110கி.வா துணை மின் நிலையத்திற்கு கோபுரங்கள் அமைக்க தனியார் விளை நிலங்களை அரசு பயன்படுத்தியுள்ளது.
இதற்க்காக இழப்பீட்டு தொகை பெற்று தருவதாக கூறி மின்வாரிய அதிகாரிகள் மேற்கூறிய இடங்களை கையகப்படுத்தி உயரழுத்த மின் கடத்திகளை பொருத்தியுள்ளனர்.
100 சதவீத பணிகள் முடிவடைந்தும், இழப்பீட்டு தொகையினை குறிப்பிட்ட விவசாயிகளுக்கு வழங்க்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் குறைதீர் முகாமிலும் அவ்வப்போது மனு அளித்தும் பலனில்லை என்கின்றனர்.
இந்த நிலையில், இன்று தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக அதிராம்பட்டினம் 110KV துணை மின் நிலையத்தை திறந்து வைக்க இருக்கிறார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் அதிராம்பட்டினம் மின் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், உரிய இழப்பீட்டு தொகையினை அறிவித்தப்படி கொடுக்க வேண்டும் என்றும் தவறினால் முதல்வரின் கவனத்தில் ஈர்க்கும்படியான போராட்டத்தை முன்னொடுப்போம் என்றனர்.