Thursday, May 2, 2024

அதிரையில் உயிரை சாய்க்க சாய்ந்து வரும் மின்கம்பம் – உயிர்பெறுமா அதிரை மின்சார வாரியம்..??

Share post:

Date:

- Advertisement -



தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை அருகே மின்கம்பம் ஒன்று சாலையோரத்தில் சாய்ந்து கீழே முறிந்து விழும் நிலையில் உள்ளது.

அதிரை வண்டிப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் பிரதான சாலையின் (தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் இமாம் ஷாஃபி பள்ளிக்கு அருகே உள்ள சாலை) ஓரத்தில் உள்ள மின் கம்பம் சாலையில் முறிந்து விழும் நிலையில் சமீபகாலமாக  இருந்து வருகிறது. இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து சாலையில் செல்லும் வாகனத்தின் மேல் விழுந்து சாலை விபத்துகள் மட்டுமின்றி மின்சாரம் தாக்கி உயிர் இழப்பு ஏற்படுத்துவதற்க்கு வாய்ப்புள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் :-
மாதந்தோறும் பராமரிப்பு பணி என்கிற பெயரில் மின்சார வாரியம் என்ன தான் செய்கின்றது என்ற கேள்வியை முன் வைத்துள்ளனர்.

மேலும், அதிரையில் பல்வேறு பகுதியில் இதே போல் சாலை ஓரங்களில் உள்ள மின்கம்பங்கள் பழுதாக உள்ளது என்றும், அதனையும் விரைவில் சரி செய்து தங்களுடைய கடமைகளை செயல்படுத்துமாறு மக்கள் மத்தியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதன் பின்னராவது அதிரையில் உள்ள TNEB தமிழ்நாடு மின்சார வாரியம் நடவடிக்கை மேற்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...