Sunday, May 12, 2024

அதிரை டூ சென்னை அரசின் நேரடி AC பேருந்து சேவை..! இன்று துவங்கி வைக்கிறார் MLA..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டுவந்த அரசு பேருந்து சேவை திடீரென நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நிறுத்திய பேருந்து சேவையை மீண்டும் துவக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதனிடையே கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்த முன்னாள் பேரூர்மன்ற தலைவர் S.H.அஸ்லம் அதிரையிலிருந்து சென்னைக்கு நேரடி பேருந்து சேவையை அரசு மீண்டும் துவக்க கோரிக்கை விடுத்தார். அதுமட்டுமின்றி அதிரை எக்ஸ்பிரஸ்ன் முதன்மை ஆசிரியர் ஹசன் சமீபத்தில் சென்னையில் உள்ள பல்லவன் விடுதியில் அதிரை சென்னை வழித்தடத்தில் பேருந்து சேவை மீண்டும் வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்திருந்தார்.

இந்நிலையில், அதிரை மக்களின் பல நாள் கோரிக்கையை ஏற்ற
இன்று முதல் அதிரையிலிருந்து சென்னைக்கு நேரடி புதிய குளிரூட்டப்பட்ட அரசு பேருந்து சேவை துவக்கப்பட உள்ளது. இந்த சேவையை இன்றிரவு 7.15 மணிக்கு பட்டுக்கோட்டையில் நடைபெறும் விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை கொடியசைத்து பேருந்து சேவையை துவக்கி வைக்க இருக்கிறார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...